×

கலவரத்தில் கைதானவர்களை சிறையில் சந்தித்து ஆறுதல்

ஆத்தூர், மே 7: சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது, இருதரப்பினரிடையே இடையே மோதல் ஏற்பட்டு, கலவரம் வெடித்தது. இது தொடர்பாக இருதரப்பைச் சார்ந்த 28 பேரை, போலீசார் கைது செய்தனர். இதில் ஒரு தரப்பை சேர்ந்த 14 பேர், ஆத்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: எங்கள் மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும். அவர்களது கோயில் வழிபாட்டு உரிமையை, இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக காவல்துறை ஒருதலைபட்சமாக செயல்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post கலவரத்தில் கைதானவர்களை சிறையில் சந்தித்து ஆறுதல் appeared first on Dinakaran.

Tags : Athur ,Mariamman temple festival ,Divattipatti ,Omalur, Salem district ,Riot ,Dinakaran ,
× RELATED சேலம் தீவட்டிப்பட்டி திருவிழா கலவரம்...